Namvazhvu
ஆசிய இறையியலில் திருப்பீடம் அக்கறை
Wednesday, 13 Mar 2019 12:46 pm
Namvazhvu

Namvazhvu

ஆசிய இறையியலில் திருப்பீடம் அக்கறை

ஜனவரி 21 முதல் 24 வரை திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராய தலைவர் கர்தினால் லூயிஸ் லதாரியா, செயலர் பேராயர் அகஸ்டின், இந்தியாவின் முன்னணி இறையியலா ளர்களும், கர்தினால்கள், ஆயர்கள், பேராயர்கள் என 18 பேரும் பெங்களூருவில் ஒன்று கூடி "விசுவாசம்" பற்றி விவாதித்துள்ளனர்.

திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் இக்காலச் சூழலுக்கேற்ப ஆசிய இறையியலில் காணப்படும் வளர்ச்சி பற்றி அறிந்துகொள்ள முனைந்துள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆயர் தாப்ரே, இந்திய இறையியல் பற்றி அறிந்து கொள்வதில் விசுவாசக் கோட்பாட்டு பேராயம் ஆர்வமாய் உள்ளது என கருத்துத் தெரிவித்துள்ளார்.