Namvazhvu
Season Of Creation திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் 
Wednesday, 13 Jan 2021 06:38 am

Namvazhvu

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் 
#Season Of Creation

"காலநிலையை மறுசீரமைத்து நிலைப்படுத்துவது, பூமிக் கோளத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் இன்னும் தீவிர இலக்குகளை கடைபிடிக்க, நான் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன்",

"பல்வேறு ஆன்மிக அறிஞர்கள் சொல்லித்தந்துள்ளது போல், வானம், பூமி, கடல், மற்றும் ஒவ்வொரு படைப்பும், படைத்தவருடன் மீண்டும் நம் உறவைப் புதுப்பிக்க உதவும் அடையாளங்களாக அமைந்துள்ளன"

“வாளால் குத்தி ஊடுருவப்பட்ட இதயம் கொண்ட வியாகுல அன்னை, இயேசுவின் மரணத்தைக்கண்டு கடும்வேதனையுற்றார், அவர் இப்போது, இந்த உலகில் மனித சக்தியால், சிலுவையில் அறையுண்டுள்ள வறியோர் மற்றும், பயனற்றவை என்று ஒதுக்கப் பட்டுள்ள படைப்புயிர்கள் ஆகிய அனைவரின் துன்பங்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்”

"தொற்றுநோயின் உலகளாவிய பரவல் என்ற கொடுமையில், மாயையான பாதுகாப்புகள் குலைந்துள்ள நிலையில், பல நம்பிக்கைகள் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ள சூழலில், கைவிடப்பட்ட உணர்வு, நம் உள்ளங்களை பாரமாக அழுத்தும் வேளையில், இயேசு நம் ஒவ்வொருவரிடமும், ’துணிவு கொள், உன் இதயத்தை என் அன்புக்காக திறந்துவிடு’ என்று கூறுகிறார்"