Namvazhvu
புனித யோசேப்பு ஆண்டு
Tuesday, 23 Mar 2021 10:11 am

Namvazhvu

புனித யோசேப்பு ஆண்டை முன்னிட்டு பிலிப்பைன்சில் உள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை ஆலயத்திற்கு திருவழிபாட்டிற்குச் செல்லும் கிறிஸ்தவ ஆண்களை மட்டும் ஒருங்கிணைத்து ஓர் அமைப்பை ஏற்படுத்த விழைந்துள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மணிலா ஆயர் பிரேடெரிக் பாபிலோ, புனித யோசேப்பின் வாழ்க்கை முன்னுதாரணமாகக் கொண்டு, தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்படும் இந்த ஆண்கள் அமைப்பு, புனித யோசேப்பின் அடியொற்றிய வாழ்வைப் பின்பற்றி, இல்லத்திலும் நாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். இத்தாலிய புனிதர் யோசேப்பு மாரெல்லோ அவர்கள் 1878 ஆம் ஆண்டு ஏற்படுத்திய புனித யோசேப்பு துறவறச் சபை, 1915 ஆம் ஆண்டு முதல் பிலிப்பைன்சில் உள்ள பங்குகளில் மறைக்கல்விப் பணியைச் சிறப்பாக செய்து வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.