Namvazhvu
மகிழ்வுடன் வரவேற்கிறோம் ! நம் வாழ்வின் ஒன்பதாவது ஆசிரியர்
Thursday, 08 Jun 2023 10:04 am
Namvazhvu

Namvazhvu

தமிழக கத்தோலிக்க ஆயர்பேரவையின் நம் வாழ்வு வார இதழின் ஒன்பதாவது ஆசிரியராகப் பொறுப்பேற்கும் அருள்முனைவர் இராஜசேகரன்  அவர்களை மகிழ்வோடு வரவேற்கிறோம். 2010 முதல் 2013 வரை நம் வாழ்வின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய இவர், சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் இதழியலில் முதுகலைப் படித்து, சமூக ஊடகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். மிகுந்த புத்துணர்வுடனும் புதிய சிந்தனைகளுடனும் நம் எண்ணங்களுக்கு வண்ணம் தர வருகை தந்திருக்கும் தந்தை அவர்களின் பணி சிறக்க நம் வாழ்வு சந்தாதாரர்கள், வாசகர்கள், புரவலர்கள், முகவர்கள், மறைமாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம்.

- நம் வாழ்வு குடும்பம்