Namvazhvu
விடைபெறுகிறார்... துணை ஆசிரியர் அருள்பணி P. ஜான்பால்
Friday, 07 Jun 2024 11:26 am
Namvazhvu

Namvazhvu

நம் வாழ்வுநன்றி உணர்வோடு வாழ்த்தி வழியனுப்புகிறது!

 தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம்நம் வாழ்வு’  அலுவலகத்தில் அதன் துணை ஆசிரியராகக் கடந்த மூன்று ஆண்டுகளாய்த் திறம்படப் பணியாற்றிய அருள்பணி. P. ஜான்பால் அவர்கள் பணி மாறுதலாகி தன் சொந்த மறைமாவட்டப் பங்குப் பணிக்குச் செல்கிறார். அருள்பணி. ஜான் பால் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில்திருத்தந்தையின் முழக்கம்’, ‘திரு அவைச் செய்திகள்படைத்து, ‘ஞாயிறு தோழனாய்வாசகர்கள் மத்தியில் வலம் வந்து, ஏராளமான பாராட்டுகளைப் பெற்றவர். திரு அவைச் செய்திகளை யாவருக்கும் புரியும் வகையில் எளிய வடிவில் இரத்தினச் சுருக்கமாய்த் தந்து, வாசகர்களைத் தன்வசமாக்கியவர்.

மொழிமாற்றம் செய்வதில் மிகவும் திறமையான இவரை இப்பணிக்காகத் தந்த வேலூர் மறைமாவட்டத்திற்கும், அதன் நிர்வாகி பேரருள்திரு. . ஜான் இராபர்ட் அவர்களுக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் சார்பாகவும், ‘நம் வாழ்வுவெளியீட்டுச் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வாசகர்கள், சந்தாதாரர்கள், அலுவலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சார்பாகவும்நம் வாழ்வுநன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. அருள்பணி. ஜான்பால் அவர்கள் செல்லும் இடங்களில் இறைப்பணி சிறக்கவும், அவருக்குத் தேவையான  உடல், உள்ள, ஆன்ம நலன்களை இறைவன் நிறைவாகத் தந்து வழிநடத்தவும்நம் வாழ்வுவாழ்த்தி வழியனுப்புகிறது.                                                           

- முதன்மை ஆசிரியர்