Namvazhvu
சமூகக் குரல்கள்
Wednesday, 18 Sep 2024 06:09 am
Namvazhvu

Namvazhvu

“பெண்களைப் பற்றிய இந்திய ஆண்களின் அணுகுமுறை மாற வேண்டும். பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதை நான் ஆதரிக்கிறேன். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா அமலாவதன் மூலம் இது சாத்தியமாகும். பெண்கள் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்களுக்குப் பொருளாதார ரீதியில் ஆதரவளிக்க வேண்டும். அவர்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும்.”

- திரு. இராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்

“மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் வழியாக வேண்டுகோள் விடுத்து வருகிறார். ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களின் நலன்களை மதிக்காமல், அவர்களது வாழ்வாதாரத்தை நாசப்படுத்தும் இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

- இரா. முத்தரசன், மாநிலச் செயலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

“பார்வைத் திறனற்றோர் இந்த உலகைப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக எனது கண்களைத் தானமாக வழங்க நான் வாக்குறுதியளிக்கிறேன். தற்போதைய இளம் தலைமுறையினர் கண் தானம் அளிக்க உறுதி ஏற்கவேண்டும்.”

- டி.ஐ.ஜி. பகலவன், குற்றவியல் புலன் விசாரணை நுண்ணறிவுத் துறை