Namvazhvu
திரு அவையின் தாய்மையை வெளிப்படுத்த மறக்காதீர்கள்!
Thursday, 26 Sep 2024 07:14 am
Namvazhvu

Namvazhvu

சிங்கப்பூர் திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாளில் ஆயர்கள், குருக்கள், துறவறத்தாரைச் சந்தித்த திருத்தந்தை, ‘மக்களோடும் கடவுளோடும் ஒன்றுபட்டு, தங்களுக்குள் சகோதரர்களாக, ஆயருடன் ஒன்றிணைந்தவர்களாக வாழ வேண்டும்என்று குருக்களிடம் கேட்டுக் கொண்டார். பிறகு பெண்களிடம் பேசிய திருத்தந்தை, தங்கள் அடையாளத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், ‘திரு அவையின் தாய்மையை வெளிப்படுத்த மறக்காதீர்கள்என்றும் கூறினார். இறுதியாகபுன்னகைத்துக்கொண்டே இருங்கள்என்று கேட்டுக்கொண்டார்.