Namvazhvu
திருத்தந்தையுடன் செலன்ஸ்கி
Friday, 25 Oct 2024 06:39 am
Namvazhvu

Namvazhvu

உக்ரைன் நாட்டின் அரசுத் தலைவர் செலன்ஸ்கி அக்டோபர் 11-ஆம் தேதி வத்திக்கானில் திருத்தந்தை மற்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் ஆகியோருடனான சந்திப்பின்போது, இரஷ்யாவுடனான போரில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் போர் நிலைகள் குறித்தும், மனிதாபிமான நெருக்கடிகள் குறித்தும், நீடித்த அமைதியைக் கொண்டு வரவேண்டுமென்றும், போரை முடிவுக்குக் கொணரும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. திருத்தந்தை பிரான்சிஸ்அமைதி என்பது வலுவற்ற ஒரு மலர்என்ற எழுத்துகளும், மலரின் உருவமும் பொறிக்கப்பட்ட வெண்கலத் தகட்டையும், இவ்வாண்டிற்கான அமைதி செய்தியையும், திருத்தந்தை எழுதிய சில ஏடுகளையும், உக்ரைன் கிரேக்கக் கத்தோலிக்கர்கள் குறித்த நூல் ஒன்றையும் அரசுத் தலைவருக்குப் பரிசாகத் திருத்தந்தை வழங்கினார்.