No icon

இலங்கையில் மே 5, ஞாயிறுத் திருப்பலிகள் ரத்து

இலங்கையில், புகழ்பெற்ற ஒரு கத்தோலிக்க ஆலயம் மற்றும் ஒரு பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என, நம்பத்தகுந்த இடத்திலிருந்து கிடைத்த தகவல்களின் பேரில், மே மாதம் 5 ஆம் தேதி வரை அனைத்து த் திருப்பலிக் கொண்டாட்டங்களும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. கொழும்புப் பேராயர்  கர்தினால் மால்கம்
மே மாதம் 3 ஆம் தேதி வழக்கம் போல் இனி ஞாயிறன்று திருப்பலி நடைபெறும் அறிவித்திருந்த நிலையில், தாக்குதல் நடத்தப் படக்கூடும் என, நம்பத்தகுந்த இடத்திலிருந்து கிடைத்த தகவல் களின் பேரில், மே 5 ஞாயிறன்று மீண்டும் ஆலயங்களில் திருப்பலிகளை இரத்து செய் திருப்பதாகத் தெரிவித்தார்.
அடுத்து செய்திகள் கிடைக்கும்வரை, கத்தோலிக்க ஆலயங்களும், கத்தோலிக்கப் பள்ளிகளும்கூட மூடப்பட்டிருக்கும் எனவும், கொழும்பு பேராயர், கர்தினால் இரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 

Comment