No icon

மொசாம்பிக், மடகாஸ்கர், மவுரீசியஸ் திருத்தூதுப் பயணம்

செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொசாம்பிக், மடகாஸ்கர் மற்றும், மவுரீசியஸ் நாடுகளில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் குறித்த விவரங்களை திருப்பீட செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி மதியம் வரை  மொசாம்பிக் நாட்டிலும், ஆறாம் தேதி மதியம் முதல் எட்டாம் தேதிவரை மடகாஸ்கர் நாட்டிலும், ஒன்பதாம் தேதி மவுரீசியஸ் நாட்டிலும் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுவிட்டு, உரோமைக்கு செப்டம்பர் 10 ஆம் தேதி திரும்புவார். திருத்தந்தையின் இத்திருத் தூதுப் பயணம் வெற்றி பெறவும் பாதுகாப்பாக நாடு திரும்பவும் இறைமக்களாகிய நாம் இறை வேண்டல் செய்வோம்.

Comment