No icon

நகைச்சுவைக் கலைஞர்களுடன் திருத்தந்தை!

கலாச்சாரம், கல்விக்கான திருப்பீடத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தொலைக்காட்சி, சினிமா, நாடகம், அச்சு ஊடகங்கள், பாடல்கள், சமூக ஊடகத்தின் வழியாகத் தங்கள் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

இத்தகைய நகைச்சுவைப் பேச்சு, நகைச்சுவை உணர்வு, முரண்நகை வழியாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞர்களைச் சந்தித்த திருத்தந்தை, “பொது மற்றும் தனிப்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில், இவ்வளவுஇருண்ட செய்திகளுடன்நகைச்சுவை நடிகர்கள் அமைதியையும், புன்னகையையும் பரப்ப முடிகிறது. மேலும், மிகவும் வேறுபட்ட மக்களிடம் வெவ்வேறு தலைமுறைகள் மற்றும் வெவ்வேறு கலாச்சார பின்னணிகளில் பேசக்கூடிய மக்களிடம் நகைச்சுவை வழியாக எளிதாக உரையாட முடிகிறதுஎன்று குறிப்பிட்டார். மேலும், விளையாட்டுத்தனமான வேடிக்கையும், சிரிப்பும் மனித வாழ்வின் மையம் என்பதை நகைச்சுவை நடிகர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள் என்று கூறினார்.

Comment