No icon

போர்க் கைதிகளை விடுவிக்க திருத்தந்தை பிரார்த்தனை!

உக்ரைனுக்கும், இரஷ்யாவுக்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப் போரை நிறுத்த திருத்தந்தை பலமுறை கோரிக்கை வைத்து, போர் முடிவு பெற வேண்டுமென்று பலமுறை செபிக்க அழைத்துள்ளார். இப்போரில் பல இராணுவ வீரர்கள் போர்க் கைதிகளாக இருக்கின்றார்கள். அதில் உக்ரைன் நாட்டைச் சார்ந்த இரண்டு கிரேக்க அருள்பணியாளர்களும் போர்க் கைதிகளாக இருந்தார்கள். தற்பொழுது இரஷ்யா இந்த இரண்டு அருள்பணியாளர்களோடு மொத்தமாக 10 போர்க் கைதிகளை உக்ரைன் நாட்டிற்குத் திருப்பிக் கொடுத்துள்ளார்கள். போர்க் குற்றவாளி கைதிகளின் விடுதலைக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, போரினால் காயமடைந்த மக்களின் வலியை உணர்ந்து பார்க்கவும், அனைத்துக் கைதிகளையும் விடுவிக்க ஒன்றாகப் பிரார்த்தனை செய்யவும் அழைப்பு விடுத்துள்ளார்.

Comment