CAFOD
சமூகங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயல்படவேண்டும் -பிரிட்டனின் கத்தோலிக்க CAFOD அமைப்பு.
- Author Fr.Gnani Raj Lazar --
- Thursday, 07 May, 2020
வளரும் நாடுகளின் ஏழை மக்கள், இத்தொற்று நோயால் இறப்புக்களை மட்டுமல்ல, வருங்காலம் குறித்த நிச்சயமற்ற ஒரு நிலையையும் எதிர்நோக்கிவருகின்றனர் என்ற CAFOD உதவி அமைப்பு, ஆப்ரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, மத்தியகிழக்கு நாடுகள் ஆகியவைகளின் நிலை குறித்தும், சிரியா, தென் சூடான், மற்றும், பங்களாதேசில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் குறித்தும், அச்சம் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
நிதியுதவியை அல்ல, மாறாக, அனைத்து சமுதாயங்களும் இத்துன்ப வேளையில் ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயல்படவேண்டும் என்பதை எதிர்பார்ப்பதாக இந்த கத்தோலிக்க அமைப்பு அறிவித்துள்ளது.
ஏழை நாடுகளில், குறிப்பாக, ஆப்ரிக்கக் கண்டத்தில், ஏழை மக்களுக்கு உணவுப்பொருட்களையும், கை சுத்திகரிப்பு திரவங்களையும், அப்பகுதி தலத்திருஅவைகள் வழியாக வழங்கி வருவதாகக் கூறும் ஊஹகுடீனு அமைப்பு, உணவு, சுத்தமான குடிநீர் வழங்குதல், பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்கள் போன்றவைகளே, தற்போது தங்கள் முதல் குறிக்கோளாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
ஐ.நா.வின் அண்மைய ஆய்வறிக்கையின்படி, கோவிட்-19 தொற்றுநோய், உடனடியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஆப்ரிக்காவில் மூன்று இலட்சம் முதல் முப்பத்து மூன்று இலட்சம் உயிர்களை நாம் இழக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது
Comment