No icon

திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்

இயேசு தீமையை வென்றார். சிலுவையை ஒரு பாலமாக மாற்றி, உயிர்ப்பை அடைந்தார். ஒவ்வொரு நாளும் அவரைப் புகழ்வதற்காகவும், போற்றுவதற்காகவும் நமது கைகளை அவரை நோக்கி உயர்த்துவோம்.”

- ஏப்ரல் 15, திருப்பயணிகளுக்கான செய்தி

 “நம் வாழ்க்கையை முன்னேற்ற உதவிய நல்லுணர்வுகள் மற்றும் அனுபவங்களை நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நாம் பகிரும்போது இயேசு நம் இதயங்களை வியப்பில் ஆழ்த்துகின்றார், நாம் வாழ்கின்ற சூழலை இன்னும் அழகாக மாற்றுகின்றார்.”

- ஏப்ரல் 14, ஞாயிறு மூவேளைச் செப உரை

கடவுளைச் சந்தித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள கடினப்படுகின்றோம். நம் இதயங்களைத் தொட்ட இயேசுவைப் பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் வழியாக நாம் மகிழ்ச்சியை அடைய முடியும்.”         

- ஏப்ரல் 14, ஞாயிறு மறையுரை

இயேசு நம்மை நன்கு அறிந்துள்ளார், அவர் நம்மை அன்பு செய்கின்றார். நாம் பயம்கொள்ளத் தேவையில்லை, ஏனெனில், நமது சிலுவைகள், உயிர்ப்பில் உருமாறும். ஒவ்வொரு துன்பமும் நம்பிக்கையாகவும், ஒவ்வொரு புலம்பலும் நடனமாகவும் மாறும்.”

- ஏப்ரல் 13, திருத்தந்தையின்டுவிட்டர்குறுஞ்செய்தி

நிறைவேறாத ஆசைகளினால் உருவான விரக்திகள், நனவாக முடியாத கனவுகள், இழக்கப்பட்ட நட்புகள் எனப் பல்வேறு நேர்மாறான நிலைகளை நாம் சந்திக்க வேண்டியிருந்தாலும், இந்நிலைகளிலிருந்து நாம் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையை இயேசுவின் உயிர்ப்பு நமக்கு வழங்குகிறது.”

- ஏப்ரல் 12, உலக கிறிஸ்தவர்களுக்கான செய்தி

 

Comment