No icon

மூத்த அருள்பணியாளர்களோடு திருத்தந்தை

மே 14-ஆம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலுக்கு மிக அருகிலுள்ள புனித வளனார் பங்குத்  தளத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு திருநிலைப்படுத்தப்பட்ட 70 அருள்பணியாளர்களைச் சந்தித்தார். மேலும், அங்கு மறைக்கல்வி வகுப்புகளில் கலந்துகொள்ளும் தொடக்கப்பள்ளி குழந்தைகளின் குழுவொன்றையும் சந்தித்து வாழ்த்தினார். மேலும், அங்கு கூடியிருந்த பங்கு மக்கள், உரோம் உயர் மறைமாவட்டத்தின் தலைவர், இருபால் துறவியர் மற்றும் பங்குத்தந்தையர் அனைவரையும் திருத்தந்தை சந்தித்து வாழ்த்தினார். அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள்  குழுவிடம், தனக்காக  இறைவேண்டல் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இறுதியாக, மூத்த அருள்பணியாளர்கள் 70 பேர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.

Comment