No icon

கோடைக்கால முகாமில் குழந்தைகளுடன் திருத்தந்தை!

வத்திக்கான் ஊழியர்களின் குழந்தைகளுக்கான வாடிகன் கோடைக்கால முகாமில் குழந்தைகள் மற்றும் ஊழியர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் ஜூலை 18 அன்று சந்தித்து உரையாடினார். அப்பொழுதுஅமைதியான வாழ்க்கை மிக அழகான வாழ்வு; நாம் வீட்டில் அமைதியைக் கற்றுக்கொள்ள வேண்டும்; நாம் சண்டையிடும்போது, நம் உடன் பிறப்புகளுடன் நமக்குக் கோபம் வரும்போது, அமைதியை ஏற்படுத்தாமல் போர் உணர்வுடன் ஒருபோதும் படுக்கைக்குச் செல்லக்கூடாதுஎன்று அறிவுரை வழங்கினார். விடை பெறுவதற்கு முன்பு திருத்தந்தை குழந்தைகளுக்கு இறுதி நன்றி கூறி விடைபெற்றார்.

Comment