No icon

கிறிஸ்தவத் தாய்க்கு மரணத் தண்டனை!

நாற்பது வயதான மருத்துவச் செவிலியரான கிரண், சமூக ஊடகங்களில் நபிகள் நாயகத்தை அவமதித்தார் என்ற புகாரின் அடிப்படையில் இஸ்லாமாபாத்தில் ஜூலை 2021-இல் கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்துள்ளது. ‘பாரபட்சத்தின் அடிப்படையில் தவறானத் தீர்ப்புஎன்று கருத்து தெரிவித்தக் கிரணின் வழக்கறிஞர் அப்துல் ஹமீத், ‘ஆதாரங்களைப் பார்க்கவோ அல்லது சரியான பகுப்பாய்வை நடத்தவோ நீதிபதி கவலைப்படவில்லைஎன்றார். மத நிந்தனைச் சட்டங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட தகராறுகளைத் தீர்ப்பதற்கும், அப்பாவி மக்களைப் பழிவாங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Comment