No icon

அவனியில் அமைதி

ஏப்ரல் மாதத்திற்கான திருத்தந்தையின் செபக் கருத்து

"வன்முறை வேண்டாம், போர் வேண்டாம், ஆயுதம் வேண்டாம் மாறாக, அமைதியான கலாச்சாரத்தை உருவாக்க உழைப்போம்" என்று தனது ஏப்ரல் மாத செபக் கருத்தில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "நாடுகளும் அதன் குடிமக்களும் ஆயுதங்களைக் குறைப்பதன் வழியாக, அமைதியையும் அகிம்சையையும் பரப்ப நாம் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

(புனித 23 ஆம் ஜான், ‘அவனியில் அமைதிஎன்ற திருமடலை வெளியிட்ட அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது, வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி 60 ஆண்டுகள் நிறைவுறுகிறது இங்கே குறிப்பிடத்தக்கது.)

Comment