No icon

திருஅவை செய்திகள்

ஜூலை 18 ஆம் தேதி

புனித தாமஸ் அக்குவினாஸ் திருஅவையில் புனிதராக அறிவிக்கப்பட்டதன் 700ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் இவ்வாண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி இத்தாலியின் ஃபோசனோவா துறவுமடத்தில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்வில் திருத்தந்தையின் பிரதிநிதியாக, புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் செமராரோ கலந்து கொள்கிறார்.

இத்தாலியின் ரோக்காசெக்கா என்னுமிடத்தில் 1225 ஆம் ஆண்டு பிறந்து தொமினிக்கன் சபை துறவியான புனித தாமஸ் அக்குவினாஸ் ஒரு பெரிய தத்துவ ஞானியாகவும், இறையியல் வல்லுநராகவும் அறியப்படுகிறார். இத்தாலியின் ஃபோசனோவா துறவு மடத்தில் 1274 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி இறைபதம் சேர்ந்த இவரை, 1323 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி திருத்தந்தை 22 ஆம் யோவான் புனிதராக அறிவித்தார். 

Comment