No icon

புதிய அதிபர் தேர்வு

கோவை மறைமாவட்டத்தில், தூய மிக்கேல் துறவற சபையின் 13-வது பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை ஆயர் தாமஸ் அக்குவினாஸ், முதன்மை குரு பேரருள்திரு. ஜான் ஜோசப் ஸ்தனிஸ் மற்றும் முன்னாள் சபை அதிபர் சகோ. வளன் மற்றும் ஆலோசனைக் குழு அருள்சகோதரர்கள் கலந்துகொண்டு வழிநடத்தினார்கள். இக்கூட்டத்தில் சபையின் புதிய அதிபர் மற்றும் ஆலோசனைக் குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், சபை அதிபராக அருள்சகோதரர் அந்தோணிராஜா அவர்களும், துணை அதிபராக அருள்சகோதரர் நசரேன் அவர்களும், ஆலோசனைக் குழுவினர்களாக அருள்சகோதரர்கள் ஜான் பீட்டர், டேவிட் ஜான் மற்றும் பொதுச் செயலாளராக (General Secretary) அருள்சகோதரர் ஜான்சன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய குழுவினர்களுக்குக் கோவை ஆயர், முதன்மைக்குரு, சபை அருள்சகோதரர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், ‘நம் வாழ்வுஇதழ் சார்பாக கோவை மண்டலநம் வாழ்வுபொறுப்பாளர் திரு. S.A. கிறிஸ்டி புதிய அதிபருக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இச்சபையானது மென்மேலும் வளர, இறைப்பணி ஆற்றிடநம் வாழ்வுவார இதழ் வாழ்த்தி மகிழ்கின்றது.

 

Comment