No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

பிறரன்புப் பணிகளுக்கான ஆற்றலை இயேசுவிடமிருந்து பெறுங்கள்.

பிறரன்புப் பணிகள் செய்வதற்கான ஆற்றலைப்பெற  செபத்திலும், இயேசுவைப் பற்றிய அமைதியான சிந்தனையிலும் செலவிடுங்கள் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினை திருத்தந்தை பிரான்சிஸ் பதிவு செய்துள்ளார்.

நவம்பர் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, பிறரன்புப் பணிகள் செய்வதற்கான ஆற்றலை நாம் எங்கிருந்துப் பெறலாம் என்ற கேள்வியுடன் ஆரம்பித்த டுவிட்டர் பதிவிற்குஇயேசுவிடமிருந்து  ஆற்றலைப் பெறுங்கள் என்பதைப் பதிலாக திருத்தந்தை பதிவு செய்துள்ளார்.

பிறரன்புப் பணிகளைத் தாராளமாகச் செய்வதற்கான ஆற்றலை செபத்திலும் இயேசு பற்றிய அமைதியான சிந்தனையிலும், பெறலாம் எனவும், இயேசுவோடு நாம் கொள்ளும் இச்சந்திப்பில் அவர் நம் இதயங்களை அன்பாலும் அமைதியாலும் நிரப்புவதால் அதனைப் பிறரன்புப் பணிகளுக்கு நம்மால் பயன்படுத்த முடியும் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

Comment