No icon

திருத்தந்தையின் முழக்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:

கடவுள் நம்மிடம் காட்டும் அன்பும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கும் அன்பும், ஏழைகளின் தேவைகளுக்குத் தாராளமாகப் பதிலளிக்கிறது, துயரத்தில் இருப்பவர்களுக்கு இரக்கத்தைக் காண்பிக்கிறது.”  

- செப்டம்பர் 12, சிங்கப்பூர் தேசிய திறந்தவெளி மைதானத்தில் சிறப்புத் திருப்பலி மறையுரை

இளைஞன் என்பவன் ஒரு விமர்சனச் சிந்தனையாளராக இருக்க வேண்டும். ஆனால், உங்கள் விமர்சனம் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். வெறுமனே குற்றங்களையும் குறைகளையும் மட்டுமே கூறும் விமர்சனம் புதிய வழிகளைத் திறக்காது.”

- செப்டம்பர் 13, சிங்கப்பூர் இளையோருடன் உரையாடல் செய்தி

இளமை வயது என்பது துணிவின் வயது. ஆனால், இந்தத் துணிவை நீங்கள் தவறாகப் பயன்படுத்தி உங்களுக்குப் பயன் தராத செயல்களைச் செய்வதற்குப் பதிலாக, உங்களின் முன்னேற்றத்திற்கும் பிறருடன் உரையாடுவதற்கும் அதனைப் பயன்படுத்துங்கள்.”

- செப்டம்பர் 13, சிங்கப்பூர் இளையோருடன் உரையாடல் செய்தி

துன்புறும் பல குடும்பங்களில் உள்ள மக்கள், போர் மற்றும் வன்முறையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், வறுமையினால் துன்புறும் குடும்பங்கள் ஆகிய அனைவர்மீதும் கன்னி மரியாவின் அன்பும் கருணையும் நிறைந்த பார்வை இருக்கும்.”

செப்டம்பர் 16, 17-வது தேசியத் திருயாத்திரையை முன்னிட்டுத் திருத்தந்தையின் செய்தி

Comment